வீட்டு வசதி துறை அமைச்சருடன் கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

0 Min Read

தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமி அவர்களை சந்தித்து நவம்பர் 23 கோபிசெட்டிப் பாளையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் பரப்புரை பயண பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிட அமைச்சரிடம் ஒப்புதல் பெற்றோம். பெரியார் உலகத்திற்கும் நிதி அளிப்பதாக உறுதி அளித்தார்கள். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் த.சண்முகம், ஈரோடு மாவட்ட தலைவர் இரா.நற்குணன், கோபி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், ஈரோடு மாநகர செயலாளர் தே.காமராஜ், கோபி மாவட்ட காப்பாளர் ந‌.சிவலிங்கம், கோபி மாவட்ட செயலாளர் வெ.குணசேகரன் பெரியார் பெருந்தொண்டர் கோபி ராஜமாணிக்கம் (11-11-2025).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *