ஜாதி ஒழிப்பு மாநாடு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

புறப்படு தோழா

புறப்படு!

இலால்குடி நோக்கிப்

புறப்படு!!

ஜாதியை ஒழிக்க

சட்டத்தை எரித்து!

சிறை சென்ற வீரர்கள்

நினைவைப் போற்றிட

புறப்படு தோழா

புறப்படு!

கீழவாளாடி நோக்கிப்

புறப்படு!

69 ஆண்டுகளானாலும்

தீரர்கள் கோட்டம்!

தியாகிகள் தோட்டம்!

சிறையினில் பிறந்த

சிறைப்பறவைக்கும்

தட்டப் பாறை சிறையில்

13 வயது கீழவாளாடி

பெரியசாமியும்!

கோவை சிறையில்

16 வயது நன்னிமங்கலம் கணேசனும்

 

உயிர்த் தியாகம்

செய்தது தெரியுமா

பட்ட இன்னல்கள் கொஞ்சமா!

 

சிறையிலிருந்து போய்விடு

என்று

கவர்னர் சொன்ன

போதும்

 

பெரியார் சொன்னால் மீண்டும்

சட்டத்தை கொளுத்தி

சிறைக்கு வருவேன்

 

என்று சொன்ன

புல்கானி பெரியசாமி

தெரியுமா?

300 தீரர்கள்

சிறைக்கு சென்ற

லால்குடி

தியாக பூமி நிறைத்திட

புறப்படு தோழா

புறப்படு!

லால்குடி நோக்கிப் புறப்படு!!

வருகிற நவம்பர் 26

ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீரவணக்கம்

செலுத்துவதோடு

ஆணவப் படுகொலை

தடுப்பு சட்ட ஆணையம்

அமைத்த தமிழ்நாடு முதல்வருக்கு

பாராட்டு விழாவும் நடத்திட

புறப்படு தோழா

புறப்படு!

கீழவாளாடி

நோக்கிப் புறப்படு!!!

தமிழர் தலைவர் ஆணையை ஏற்று

குடும்பம் குடும்பமாய்

வந்திடுவோம்!

 

குறையாத பெரியார்

வீரத்துடனும்

 

குன்றாத

அறிவுத்

தீரத்துடனும்

 

அலைகடலென புறப்படு!

ஆரியம் அழியட்டும்!

திராவிடம் தழைக்கட்டும்!

 

வெல்க பெரியார்  வாழ்க பெரியார்

 

புறப்படு தோழா! புறப்படு!!

லால்குடி நோக்கிப் புறப்படு!!!!

 

ச. மணிவண்ணன்,
மாவட்ட தலைவர்

திராவிடர் கழகம், துறையூர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *