திருப்பூர் மாவட்ட கழக சார்பில் ‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.10 லட்சம் வழங்கிட மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

திருப்பூர், நவ. 10- திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 07-11-2025 இரவு 7 மணி அளவில் திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது

திருப்பூர் மாவட்ட தலைவர் யாழ். ஆறுச்சாமி தலைமையேற்று உரையாற்றினார், திருப்பூர் மாநகரத் தலைவர் கருணாகரன் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார்.

மாவட்ட ப.க. தலைவர் வேலு.இளங்கோவன், மாவட்ட ப.க. செயலாளர் நாச்சிமுத்து, மாவட்ட ப.க.அமைப்பாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை ஏற்று உரை யாற்றினர்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கிருஷ்ண வேணி, திருப்பூர் மாநகர செயலாளர் செல்வராஜ், திருப்பூர் மாநகர துணை செயலாளர் கணேசன், புத்தக நிலைய பொறுப்பாளர் மைனர் ஆகியோர் உரையாற்றினர்.

திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பெரியார் உலகம்  மற்றும் இயக்க செயல்பாடுகள் குறித்து  கருத்துரை யாற்றினார்.

மாவட்ட காப்பாளர் அவிநாசி ராமசாமி 5 விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ 10,000  வழங்கினார்.

தீர்மானங்கள்

தென்னூர் முத்து, அவினாசி அங்கமுத்து ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அக்டோபர் 23 சென்னையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழுத் தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோளை ஏற்று திருப்பூர் மாவட்ட கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு பொதுமக்களிடம் நன்கொடை திரட்டி ரூ 10 லட்சம் வழங்குவது என முடிவு செய்யப் பட்டது.

நவம்பர் 22இல் பொள்ளாச்சியில்  தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்தநாள்  டிசம்பர் 2 அன்று (சுயமரியாதை நாள்) மிக எழுச்சியுடன் கொண்டாடு வது என முடிவு செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *