ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதால் கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது

1 Min Read

தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை, நவ.9 தமிழ்நாடு ஆம்னி பேருந்துகளுக்கு கேரளா போக்குவரத்து துறை ரூ.70 லட்சம் அபராதம் விதித்த நிலையில், கேரளாவுக்கு பேருந்துகளை இயக்க மாட்டோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆம்னி பேருந்துகள் முறையாக வரி செலுத்தவில்லை என்றும் ஒருமுறை கேரளாவுக்கு செல்வதற்கான தற்காலிக அனுமதியைப் பெற்று பேருந்துகள் இயக்கப்பட்டதாகக் கூறி கொச்சியில், 30 ஆம்னி பேருந்துகளுக்கு தலா ரூ.2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை மொத்தம் ரூ.70 லட்சம் வரை நேற்று முன்தினம் (7.11.2025) அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க மாட்டோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் இருந்து கேரளா மாநிலத்துக்கு நவ.7-ஆம் தேதி சென்ற 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரள போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டு, அந்தப் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கிவிடப்பட்டு, கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு கேரளா போக்குவரத்துத் துறை ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்துள்ளது. இத்தகைய நடவடிக்கை, இரு மாநிலங்களுக்கு இடையேயான நீண்டநாள் நல்லுறவையும், பொதுப் போக்குவரத்து ஒத்துழைப்பையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நவ.7-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு இயக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்படையும்.   இந்த விசயத்தில் தமிழ்நாடு அரசும் கேரளா அரசும் உடனடியாகத் தலையிட்டு, இரு மாநிலங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *