நீலகிரி, நவ.9 சமூக நீதியையும், அனைவருக்கும் சமமான வாழ்க்கைத் தரத் தையும் உறுதி செய்வதே ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமையாகும். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில், தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல் படுத்தி வரும் “தொல்குடி” திட்டம் ஒரு முக்கிய மான மைல்கல்லாகப் பார்க் கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பழங்குடி மக்களின் மிக அடிப்படைத் தேவையான பாதுகாப்பான, நிரந்தரமான வீடுகள் அமைத்துத் தரப்படுகின்றன. இப்பணியை தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஏற்றுக் கொண்டுள்ளது. 1979 வரை ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீடுகளைக் கட் டித் தந்தது. 45 ஆண்டு இடை வெளிக்குப் பிறகு, மீண்டும் பழங்குடியினருக்கான வீட்டு வசதித் திட்டத்தை, தொல்குடி திட்டத்தின்கீழ் தாட்கோ முன்னெடுத்துள்ளது.
பழங்குடி மக்களுக்கான வீடுகளின் தரத்தையும் மேம்பாட்டையும் உறுதி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம். கட்டுமான செலவைக் குறைக்கும் வகையில் தாட்கோ மூலமாகவே சுட்டுநர்கள் நியமனம், கம்பி, சிமெண்ட், கதவுகள், ஜன்னல்கள், மின்சாதனப் பொருட்கள் மற்றும் நவீன பயோ செப்டிக் டேங்க் உள்ளிட்ட அனைத்தும் மிகக் குறைந்த விலையில் மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டு, கட்டுமானப் பணியிடங்களுக்கே நேரடியாக வழங்கப்படுகின்றன.இத்திட்டத்தின்கீழ், நரிக்குறவர் மற்றும் பிற பழங்குடியினருக்கான வீடுகள், கள்ளக்குறிச்சி (கல்வராயன் மலை), திருவண் ணாமலை (ஜவ்வாது மலை) மற்றும் நீல கிரி போன்ற கடினமான மலைப் பகுதி களில் கட்டப்பட்டு வருகின்றன. சில இடங்களில், வாகனப் பாதை அற்ற ஒத்தையடிப் பாதைகள் வழியாகவே கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்.
தொழிலாளர்கள், பொருட்களைச் தலைச் சுமையாகவும், இழுவைக் கயிறுகள் மூலமாகவும் மிகுந்த சிரமங்களுக்கிடையே அதிக உயரத்துக்குக் கொண்டு செல்வது போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தாட்கோ இந்தப் பணியை அர்ப்பணிப்புடன் செய்கிறது. முதல் தொகுதியில் அனுமதிக்கப்பட்ட 1,500 வீடுகளில் 1,250 வீடுகளில் 1,000 வீடுகள் ஏப்.14 அன்றும், 250 வீடு கள் அக்.6 அன்றும் முதலமைச்சரால் பயனாளி களிடம் வழங்கப்பட்டுள்ளன.
