வெளி மாநில தொழிலாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

1 Min Read

சென்னை, நவ.9– சென்னை அசோக்நகர், டாக்டர் கலைஞர் கருணாநிதி நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களிலும் 13 வாரமாக 484 முகாம்களில் நடந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 168 பேர் பயனடைந்துள்ளனர். இந்த முகாமில் கட்டணமின்றி முழு உடல் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

இந்த திட்ட முகாம் மூலம் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து பணிபுரியும் 250 தொழிலாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நேற்று (18.11.2025) 14-ஆவது வாரமாக நடைபெற்ற முகாமில் 64 ஆயிரத்து 224 பேர் பயனடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *