தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் முக்கியத்துவத்தை குறைப்பதா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டனம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை. நவ. 9– ‘வங்கிகளை தனியார் மயமாக்குவது தேச நலனை பாதிக்காது’ என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்ப தாவது:

வங்கிகளை தேசிய மயமாக்கியதன் நோக்கங்கள் முழுமையாக எட்டப்படவில்லை என்றும், எதிர்பார்த்த பலன்களை கொடுக்க வில்லை என்றும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது வேதனைக்குரியது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், கடந்த 1969 ஆம் ஆண்டு 14 வங்கிகளை தேசியமயமாக்க எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனவே தவிர, தனியார் வங்கிகள் அல்ல.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துப் பேசுவது, பொதுத்துறை வங்கிகளை தனியார் துறைக்கு தாரை வார்க்கும் திட்டமிட்ட முயற்சியாகவே தெரிகிறது.

இது தேச நலனைப் பாதிக்கும். இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *