எனக்கு பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

1 Min Read

தமிழ்நாடு

திருச்சி, நவ. 8 – தி.மு.கழக முதன்மைச் செயலாளர் – அமைச்சர் கே.என். நேரு விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:-

எனது பிறந்த நாளான வருகின்ற நவம்பர் 9ஆம் தேதி வியாழக் கிழமை அன்று நான் ஊரில் இல்லை, அன்றைய தினம் என்னு டைய பிறந்த நாளை ஒட்டி என் மேல் அன்பு கொண்ட நல்ல உள் ளங்களும் நண்பர்களும், கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திருச்சிக்கோ, சென்னைக்கோ நேரில் வந்து எனக்கு வாழ்த்துத் தெரிவிக்க வரவேண்டாம் என்பதைதெரிவித்துக் கொள்கி றேன்.

மேலும் அன்றைய தினம் என்னுடைய பிறந்த நாள் விழா என்ற பெயரில் எவ்வித நிகழ்ச்சிகளையும் தயவு செய்து யாரும் நடத்திட வேண்டாம் என்பதை கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தி.மு.கழக முதன்மைச் செயலாளர் – அமைச்சர் கே.என்.நேரு தமது வேண்டுகோளில் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *