விபத்தில் இறந்த பசுவின் வயிற்றில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள்

1 Min Read

திருப்புவனம், நவ.8- திருப்புவனத்தில் விபத்தில் இறந்த பசுவின் வயிற்றில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு பசுவின் மீது வாகனம் மோதியதில் பசு சம்பவ இடத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகிறது. பிறகு அந்த பசுவை கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் உடற்கூராய்வு செய்துள்ளனர்.

அப்போது பசுவின் வயிற்றில் 10 கிலோ பிளாஸ்டிக் மற்றும் சிமெண்ட் பைகள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், திறந்தவெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும்போது பசுக்கள் பிளாஸ்டிக்கை சாப்பிடுவதால், அது அவற்றின் வயிற்றில் சேரும்.

இந்த சம்பவத்தின் உடற்கூராய்வு அறிக்கை இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. கால்நடைகள் தங்குமிடங்களில் அடைத்து வைக்கப்பட வேண்டும். திறந்தவெளியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அவை உட்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதால், அவற்றை சுதந்திரமாக சுற்றித் திரிய அனுமதிக்கக்கூடாது என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *