புதுடில்லி, நவ.8 வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. சார்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
எஸ்.அய்.ஆர். நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் சீராய்வு மேற்கொள்வதை ஏற்க முடியாது. விழாக் காலத்தில் செய்யப்படும் பணியால் பலர் தங்கள் வாக்குகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பீகார் எஸ்.அய்.ஆர். தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வராத நிலையிலும், தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையிலும் எஸ்.அய்.ஆர். நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாது என மனுவில் தெரி விக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த 4 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப்பணியானது தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எப்போது நடைபெறும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், S.I.R. நடை முறைக்கு எதிராக தி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட மனு மீதான விசா ரணை வரும் 11.11.2025 அன்று நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
