சென்னை கோயம்பேட்டில் சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.10 கோடியில் பூங்கா: அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

Viduthalai
2 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, மே 13 – சென்னை கோயம் பேட்டில் சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.10 கோடியில் பூங்கா அமைய உள்ள இடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) மானியக் கோரிக்கையின் போது அதன் தலைவரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு 50 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் சென்னை கோயம்பேட்டில் உள்ள சாலை சந்திப்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைக்கப்படும், தியாகராயநகர் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப் படும், மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதா னத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப் படும் ஆகிய அறிவிப்புகளும் இடம் பெற்றிருந்தது.

சென்னை கோயம்பேட்டில்  11.5.2023 அன்று அமைச்சர் பி.கே.சேகர் பாபு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில்,

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-_2024ஆம் ஆணடுக்கான மானியக் கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்திற்கு அறிவிக்கப் பட்ட 50 அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவு படுத்த வேண்டும் என்று உத்தரவிட் டிருந்தார். அதனடிப் படையில் 50 இடங்களையும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்து, 22 இடங்களில் கள ஆய்வு செய்திருக் கிறோம்.

இப்பணிகளை தொடங்குவதற்கு விரைவான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. சி.எம்.டி.ஏ. வரலாற்றில் இதுபோன்று மேற் கொள்ளப்படுகின்ற மேம்பாட்டுப் பணிகள் உடனடியாக துரிதப்படுத்தக் கூடிய நடவடிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் நடந் திருக்கின்றன.

மெகா திட்டங்களான சென்னை தீவுத்திடலில் உள்ள சுற்றுலா பொருட் காட்சியில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்தல், கிழக்கு கடற்கரை சாலையில் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிதிவண்டி பாதை அமைத்தல், கடற் கரை பார்வதி நகர் முதல் எண்ணூர் கடற்கரை பகுதி வரை 5 கி.மீ. நீளத்திற்கு அழகுபடுத்துதல், மாமல்லபுரத்தில் பேருந்து நிலையம் அமைத்தல் போன்ற பணிகளும் எடுத்துக் கொள்ளப்பட் டுள்ளன.

அனைத்து பணிகளையும் விரைவு படுத்துகின்ற நோக்கத்தோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலுடன் சி.எம்.டி.ஏ. முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

-இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில் ஆர்.மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாகர ராஜா, ஜெ.கருணாநிதி, த.வேலு, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *