வணிக ஆதரவு, புதிய கண்டுபிடிப்புக்காக கோவை, மதுரை, திருச்சி உட்பட அய்ந்து இடங்களில் சிறப்பு மய்யங்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

2 Min Read

சென்னை, நவ.7- வணிக ஆதரவு, புதிய கண்டுபிடிப்புக்காக கோவை, மதுரை, திருச்சி உள்பட 5 இடங்களில் சிறப்பு மய்யங்கள் அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

மாநாடு

தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, இந்திய கேம் டெவலப்பர்ஸ் சங்கம் ஆகியவற்றின் சார்பில் 17-ஆவது இந்திய கேம் டெவலப்பர்ஸ் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் நேற்று (6.11.2025) நடந்தது.

இந்த மாநாட்டுக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் எல்காட் நிறுவனத்துக்கும், பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அபரிமிதமான வளர்ச்சி

மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் புத்தொழிலை உருவாக்குவதில் அபரிமிதமான வளர்ச் சியை தமிழ்நாடு எட்டி உள்ளது. அனிமேஷன், காமிக்ஸ் போன்ற இணையதளம் விளையாட்டு துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இது தொடர்பான புதிய கொள்கையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய கொள்கை இணையதளம் விளையாட்டு தொழிலை எளிமையாக்குவது, திறனை வளர்ப்பது உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு மய்யங்கள்

வணிக ஆதரவு, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றுக்காக சென்னையில் சிறப்பு மய்யம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி இன்னும் 6 மாதத்தில் நிறைவடையும். இதே போன்று கோவை, மதுரை, திருச்சி,சேலம், நெல்லை ஆகிய இடங்களில் மண்டல அளவில் சிறப்பு மய்யங்கள் அமைக்கப்பட உள்ளது. இணைய தளம் விளையாட்டுத்துறையில் வேலைவாய்ப்பை பெறும் வகையில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அரசால் நடத்தப் பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் தகவல் தொழில் நுட்பத் துறை முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவ்னித், எல்காட் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *