கிருட்டினகிரியில் மாவட்ட ப.க.சார்பில் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

1 Min Read

கிருட்டினகிரி, நவ. 6- கிருட்டின கிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில்  தந்தை பெரியார் 147 -ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 2.11.2025 அன்று  கிருட்டினகிரி பெரியார் மய்யம் அன்னை மணியம் மையார் கூட்டரங்கில்  கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன் தலைமை வகித்தார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் க.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைச் செயலாளர் மா.சிவசங்கர், மாவட்ட கழகச் செயலாளர் செ.பொன்முடி, ஊற்றங்கரை ஒன்றிய  ப.க.தலைவர் இராம. சகா தேவன் ஆகியோர் முன்னிலை வகித்துப்பேசினர்.

கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ. திராவிடமணி பேச்சுப் போட்டியை தொடங்கிவைத்து வாழ்த்துரை வழங்கினார்.

நிறைவாக மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலா ளர் அண்ணா சரவணன் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாண வர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

பரிசு பெற்றவர்கள்

சி.பவித்ரா அரசு மகளிர் கலைக்கல்லூரி கிருட்டினகிரி  முதல் பரிசு ரூ 3000/-,

மு.சந்தோஷ்குமார் எ.ஈ.எஸ். கலைக்கல்லூரி கிருட்டினகிரி இரண்டாம் பரிசு ரூ 2000/-,

அ.வேல்முருகன் செயின் ஜோன்ஸ் கல்வியியல் கல்லூரி மூன்றாம் பரிசு ரூ1000/-,

மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பெரியார் குறித்த நூல்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், கிருட்டினகிரி ஒன்றிய கழக தலைவர் த.மாது, ஒன்றியச் செயலாளர் கி.வேலன், ஆலப்பட்டி சட்டக்கல்லூரி மாணவர் இர. அஜய்குமார், ஜெ.முருகன், மா.பவித்ரா, பெரியார் பிஞ்சுகள் மா.அறிவுச்செல்வன், மா.அன்புச் செல்வன், வே. அதியன், அ.சஞ்சனா, அ.சஞ்சை உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இறுதியில் வேப்பனபள்ளி ஒன்றிய பகுத்தறி வாளர் கழக நிர்வாகி  ஜெயின் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *