பருவமழை தீவிரத்தால் டெங்கு பாதிப்பு சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும்

அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை, நவ. 6- வடகிழக்குப் பருவழை தொடங்கியுள்ள நிலையில், டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை இருப்பு வைக்குமாறு அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

டெங்கு பாதிப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் பரவலாகப் பெய்துவரும் மழையால், தெருக்கள், சாலைகளில் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் ஏஜிப்டி’ வகை கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின்றன. தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை டெங்குவால் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் இறந்துள்ளனர்.

இத்தகைய சூழலில், டெங்கு கொசுக்களின் பெருக்கம் அதிகரிப்பால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்குவால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. அதனால், அரசு மருத்துவமனைகளில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறி வறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பொதுவாக பருவ கால நோய்களுக்குத் தேவையான மருந்துகளும், மருத்துவப் பொருட்களும் தமிழ்நாட்டில் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பே டெங்கு, வயிற்றுப்போக்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களுக்கும், மழைக்கால காய்ச்சல்களுக்கும் சிகிச்சை அளிக்க மாத்திரைகள் வாங்கப்பட்டன. டெங்கு, இன்ப்ளூயன்சாவுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் போதிய எண்ணிக்கையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இவைத்தவிர தொண்டை அடைப்பான், ரண ஜன்னி, கக்குவான் இருமலுக்கான டிபிடி தடுப்பூசிகள், ஓ.ஆர்.எஸ். (உப்புச் சர்க்கரை) கரைசல், கிருமி தொற்றுக்கான மாத்திரைகள் ஆகியவை அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான அளவு இருக்கின்றன. நீரில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கான குளோரின் மருந்தும் போதிய அளவில் உள்ளது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், தற்போது கூடுதல் எண்ணிக்கையிலான மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன” என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *