4 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது நீட்டிப்பு

சென்னை, நவ. 6- எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணி நடப்ப தால், நான்கு விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள் ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத் தில் மறுசீரமைப்பு பணி, 734.91 கோடி ரூபாயில் கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நடக்கிறது. பணிகளுக்கு ஏற்ப, சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்து, தாம்பரம், கடற்கரை ரயில் நிலை யங்களில் இருந்து இயக்கப் படுகின்றன.
குறிப்பாக, ராமேஸ்வரம் செல்லும் இரண்டு விரைவு ரயில்கள், உழவன், அனந்தபுரி விரைவு ரயில்கள், கடந்த சில மாதங் களாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
வரும் 11ஆம் தேதி முதல், மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பணிகள் நிறைவடையாததால், அடுத்த ஓரிரு வாரங்களுக்கு தாம்பரத்தில் இருந்து நீட்டித்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *