கழிவுநீர் சுத்திகரிப்பு: ‘உயிரி மின் வேதியியல் செரிமான முறை’

1 Min Read

தமிழ்நாட்டின் ஜவுளித் தொழிலின் மய்யமான ஈரோட்டில், ஒரு புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு முறை, அமைதியான தொழில் புரட்சியை துவங்கியுள்ளது. சென்னை அய்.அய்.டி., ஆராய்ச்சியாளர்கள் துவங்கிய ‘ஜே.எஸ்.பி., என்விரோ’ நிறுவனம், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பை ஈரோட்டில் நிறுவியுள்ளது.
இந்த ஆலையில், ‘பீட்ஸ்’ எனப்படும் ‘காற்றில்லா உயிரி மின்வேதியியல் செரிமான முறை’ (Bio-Electrochemical Anaerobic Digestor System- – BEADS) என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுகிறது. இதற்கு முன் உருவாக்கப்பட்ட, சுத்திகரிப்பு ஆலைகளில் காற்றோட்டத்திற்கு என அதிக மின்சாரம் பயன்படும். மேலும் சுத்திகரிப்புக்காக விலையுயர்ந்த வேதிப்பொருட்களை கலக்க வேண்டியிருக்கும். எனவே, கழிவுநீரை சுத்தமாக்கும் வேகத்தில், சுற்றுச்சூழல் மாசினையும் வெளியேற்றும்.
இதனால், கூடுதல் செலவை இழுத்துவிடக் கூடியவை அவை. ஆனால், ‘பீட்ஸ்’ ஆலை, செலவைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு கேடு தராமல், கழிவுநீரை நல்ல நீராக மாற்றித் தருகிறது.
இது எப்படி சாத்தியம்? பீட்ஸ் சுத்திகரிப்பு ஆலை, நுண்ணுயிரிகளையும் மின்முனைகளையும் (Electrodes) பயன்படுத்தி, ஈரக் கழிவுகளைச் ‘செரிமானம்’ செய்து நீரை சுத்திகரிக்கிறது. மேலும், சிறிதளவு மின்சாரத்தை உருவாக்குவதோடு, மிகக் குறைவான திடக் கழிவை மட்டுமே வெளியேற்றுகிறது.
இது வேதியியல் மற்றும் உயிரியல் இணைந்த ஓர் அருமையான கண்டுபிடிப்பு என வல்லுநர்கள் பாராட்டுகின்றனர். கருவிகள் வாங்கும் கடனுக்கான வட்டியும், கரியமில உமிழ்வுக்கான வரியும் உயர்ந்து வரும் இக்காலகட்டத்தில், ஒரு பீட்ஸ் ஆலையும், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 80 டன் கரியமில வாயு வெளியேற்றத்தை தவிர்ப்பது, எல்லாக் கோணத்திலும் லாபகரமானதுதான்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *