தமிழ்நாடு அரசின் மினி பேருந்து திட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

2 Min Read

சென்னை, நவ.6  தமிழ்நாடு அரசின் விரிவான சிறிய வகைப் (மினி) பேருந்து திட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், 1,350 தனியார் பேருந்துகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் இந்த மேல் முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டுள்ளனர்.

மினி பேருந்து

பேருந்து வசதி இல்லாத சிறிய கிராமங்களுக்கும் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய விரிவான சிறிய வகைப் (மினி) பேருந்து திட்டத்தை கடந்தாண்டு அறிவித்தது. அதன்படி தனியார் சிறிய வகைப் பேருந்துகள் 25 கிமீ தூரம் வரை செல்ல உரிமம் வழங்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் புதிதாக 3,103 சிறிய வகைப் பேருந்து வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு சுமார் 90 ஆயிரம் கிராமங்களில் வசிக் கும் 1 கோடி மக்கள் பயனடையும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில் சில திருத்தங்கள் செய்து கடந்த ஏப்.28 அன்று அர சாணை வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் தனிநபர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப் பட்டன. இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, குக் கிராமங்களுக்கும் எளிதான போக்குவரத்து வசதி கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறுவது மக்களின் அடிப்படை உரிமை. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடி யாது எனக்கூறி வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்தன் கவுடர் அடங்கிய அமர்வில் நேற்று (5.11.2025) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், ‘ஏற்கெனவே இந்தத் திட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது. அதே நேரம், 1,350 தனியார் சிறிய வகைப் (மினி) பேருந்துகளுக்கு அரசு உரிமம் வழங்கியது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக்கூறி விசாரணையை ஜன.3-வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *