சென்னை, நவ.6– தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரு மான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (5.11.2025) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வருமாறு:–
அண்மைக்காலமாக பா.ஜ.க. பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத்தன்மை குறித்து மீண்டுமொரு முறை பெரும் அய்யம் எழுகிறது. அரியானாவில் நடைபெற்றுள்ள வாக்குத் திருட்டு குறித்து எனது சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி அவர்கள் வெளியிட்டுள்ள ‘பச்சையான ஆதாரங்கள்’ அதிர்ச்சியூட்டுகின்றன.
வெறுப்பினை மூட்டி, பொய் வாக்குறுதி களைக் கூறி 2014 இல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என்ற நிலை எப்போதோ ஏற்பட்டு விட்டது. ஆகையால் தேர்த லில் முறை கேடுகள் என்பதை யெல்லாம் தாண்டி, வாக்காளர் பட்டியலிலேயே அப்பட்ட மான அட்டூழியத்தை அரங்கேற்றி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் களவாண்டு, இன்று அம்பலப்பட்டு நிற்கிறது.
இதன் அடுத்தகட்டம்தான் SIR என்ற பெயரில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பீகாரும், இன்று வெளியாகியுள்ள #HaryanaFiles–உமே சான்று!
இவை அனைத்துக்கும் பொறுப்பான தேர்தல் ஆணையம் இத்தனை குற்றச் சாட்டுகள், அடுக்கடுக்கான ஆதாரங்க ளோடு முன்வைக்கப்பட்டும் எந்த ஒரு முறையான விளக்கமும் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தேர்தல் ஆணையம் மக்கள் மன்றத்தில் உரிய பதில் சொல்லி, இந்தியாவில் மக்களாட்சி முழுவதும் குழிதோண்டிப் புதைக்கப்படவில்லை என நம்பிக்கையைத் துளிர்க்க வைக்குமா?
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் பதி விட்டுள்ளார்.
