திருமண உறவின் உண்மையான சாராம்சம் பரஸ்பரம், மரியாதை, நட்பு மற்றும் கருணையில் உள்ளது உயர்நீதிமன்றம் மதுரை கிளை

1 Min Read

மதுரை, நவ.5 உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தன்னை தாக்கிய வழக்கில் கணவரை குற்றமற்றவர் எனக்கூறி விடுதலை செய்த உத்தரவை எதிர்த்து இந்திரா என்ற பெண் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றம் “இந்திராவின் கணவன் தனசீலனுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத்தண்டனையை குறைக்கத் தேவையில்லை.

குற்றவாளி முதியவர் என்பதற்காக மட்டும் தண்டனையில் சலுகை கோருவதை ஏற்க முடியாது” எனத் தெரிவித்தது.

மேலும், “திருமண உறவின் உண்மையான சாராம்சம் பரஸ்பரம், மரியாதை, நட்பு மற்றும் கருணையில் உள்ளது. திருமண உறவு என்பது அடக்குமுறை அல்லது துன்பத்தை அமைதியாக தாங்கிக்கொள்வதில் இல்லை.

துன்புறுத்தலின்போது அமைதியாக இருப்பது சகிப்புத்தன்மை அல்ல. அது அடக்குமுறையை நிலைநாட்டும் அடிமைத்தனம். வீட்டிற்குள் நடக்கும் துன்புறுத்தல் பல நேரங்களில் நான்கு சுவருக்குள் மட்டுமே நிகழ்பவையாக இருக்கும். ஒவ்வொரு செயலுக்கும் நேரடி சாட்சி வேண்டும் எனக் கூறுவது அந்த சட்டப்பிரிவின் நோக்கத்தையே சிதைக்கும்” எனக் கருத்து தெரிவித்தது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *