மாணவி நந்தினிக்கு கழகத் தோழர்கள் பாராட்டு

1 Min Read

அரசியல்

திண்டுக்கல், மே 13-  12ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் 600/600 பெற்ற மாணவி நந்தினியை, திராவிடர் கழகத்தின் சார்பில், திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆர். காஞ்சித்துரை, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா. கமல் குமார், நகர துணைச் செயலாளர் எஸ். செபாஸ்டியன் சின்னப்பர் ஆகியோர் சந்தித்து பயனாடை அணிவித்து, “கல்லூரி பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர்” என்ற நூலை வழங்கினர். மேலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அலைபேசி மூலம் மாண விக்கு வாழ்த்து தெரிவித்தார். மாணவி, தமிழர் தலைவர் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தார்.

திண்டுக்கல் சந்தை ரோடு அனைத்து வியாபாரிகள் பொதுநல  சங்கத்தின் சார்பில், தலைவர் நடராஜன், செயலாளர் வீரபாண்டி யன், பொருளாளர் பிரபாகரன், இணைச் செயலாளர் மனோகரன், துணைச் செயலாளர் பொன்ராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மாணவி நந்தினிக்கு பயனாடை அணிவித்து, சங்கத்தின் சார்பில் 10,000 ரூபாய் பரிசளித்த னர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *