கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.11.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பீகாரை ஒரு உற்பத்திக் கேந்திரமாக மாற்றுவோம்,  தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் உறுதி.

* பீகாரில் பெண்களுக்கு தலா ரூ.30,000: ஆர்ஜேடி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி வாக்குறுதி

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘10% பேர் கட்டுப்பாட்டில் ராணுவம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள்’… பீகார் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு. தனியார் நிறுவனங்கள், நீதித்துறை, அதிகார வர்க்கம் மற்றும் ஆயுதப் படைகளில் ஒடுக்கப்பட்ட ஜாதிகள், பழங்குடியின சமூகங்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு மிகக் குறைந்த பிரதிநிதித்துவமே உள்ளதாகவும், மக்கள் தொகையில் 10% பேர் மட்டுமே இந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தி இந்து:

* “பீகாரில் பாஜக-ஜேடியூ அரசு 20 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. இன்றும் கூட, பீகாரில் ‘மருமகள்கள் மற்றும் மகள்கள் பாதுகாப்பாக இல்லை’ என்று மோடி ஜி கூற வேண்டியிருந்தால், 20 ஆண்டுகளில் பீகாரைப் பாதுகாப்பானதாக மாற்ற வில்லை என்பது அவரது சுய ஒப்புதலாகும்!” என மல்லிகார்ஜூன கார்கே சாடல்.

டெக்கான் ஹெரால்ட்:

* எஸ்அய்ஆரை எதிர்த்து மேற்கு வங்கத்தில் பேரணி: தகுதியான ஒரு வாக்காளரை நீக்கினாலும் மோடி அரசு கவிழும்: முதலமைச்சர் மம்தா அதிரடி

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *