பெரியார் விடுக்கும் வினா! (975)

Viduthalai
1 Min Read

அரசியல்

பண்டிதர்கள், உபாத்தியாயர்கள், தமிழ்ச் செல்வர் கள் – புராண இதிகாசங்கள் – அதுவும் தமிழர்களுக்குச் சம்பந்தமில்லாததும், தமிழர்களுக்கு இழிவைத் தரக்கூடியதும், தமிழர் முற்போக்கைத் தடுக்கக் கூடியதும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததுமான விசயங்கள் கொண்ட புராண இதிகாசங்களை – சமய ஆதாரங்கள் போலவும், தேசச் சரித்திரங்கள் போலவும் நம் குழந் தைகளுக்குக் கற்பிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப் படுகிறார்களா? இவ்விசயத்தில் இனியாவது தமிழ்ப் பண்டிதர்கள், தமிழ் உபாத்தியாயர்கள், உண்மைத் தமிழ்ப் பெற்றோர்கள் ஒன்று கூடி – மாநாடு கூட்டி – இம்மாதிரி விசயங்கள் பள்ளிப் படிப்பில் நுழையாமல் இருக்கும்படிச் செய்யக் கூடாதா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *