இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை ஒன்றிய அமைச்சரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

1 Min Read

நாகப்பட்டினம், நவ. 04- இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடுமீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மீனவர்கள் கைது

நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டை, நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 31 மீனவர்கள் அக்.31ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு (2.11.2025) இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றிவளைத்து, இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி, 31 மீனவர்களையும் கைது செய்தனர். 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.11.2025) கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

விடுவிக்க நடவடிக்கை

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது 3 இயந்திரமயமாக்கப்பட்ட படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கை கடற்படையினர், அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகையும் சிறைபிடித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் இருக்கிறது. எனவே, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க உடனடியாக தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *