நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு இலங்கை கடற்படையினரின் அடாவடித்தனம் நீடிக்கிறது

1 Min Read

ராமேசுவரம், நவ.3 கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் எல்லைமீறி மீன்பிடித்ததாக கூறி கைதுசெய்து சிறையில் அடைப்பதும் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் ெதாடர் கதையாக நடந்து வருகிறது.

இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்யவும் பறிமுதல் செய்யப்பட்ட அவர்கள் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு பல முறை கடிதம் எழுதி உள்ளார்.

இந்த நிலையில் கடலுக்குச் ெசன்ற ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில்  விரட்டியடித்துள்ளனர். இந்தச் சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (2.11.2025) 313க்கும் மேற் பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் அடையாளச் சின்னம் (டோக்கன்) பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்திய கடல் பகுதியில் 100க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது கச்சத்தீவு கடல் பகுதியில் இருந்து சிறிய ரக சுற்றிப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் திடீரென மீன்பிடி படகுகளை சுற்றி வளைத்து மீனவர்களை அச்சுறுத்தினர். எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி மீனவர்களை தொடர்ந்து மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கி முனையில் விரட்டியடித்தனர்.

இதனால், அச்சமடைந்த மீனவர்கள் உடனடியாக நடுக்கடலில் மீன்பிடி வலைகளை வெட்டி வீசிவிட்டு இலங்கை கடற்படை பிடியில் சிக்காமல் தப்பி வந்தனர். பின்னர், தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்தனர். மீனவர்களில் ஒரு பகுதியினர் கைது நடவடிக்கைக்கு அஞ்சி இரவே கரை திரும்பினர். மற்றவர்கள் இன்று காலை சுமாரான மீன்களுடன் கரை திரும்பினர். இதனால் தங்களுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படை தொடர்ந்து சிறைபிடித்துவரும் நிலையில் தற்போது நடுக்கடலில் விரட்டியத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *