சென்னை மெட்ரோ ரயில் – 4ஆவது வழித்தடம்: இரட்டை அடுக்கு பிரிவின் முக்கிய கட்டுமானப் பணி நிறைவு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை நவ.3-  மெட்ரோ ரயில் திட்டத்தின் 4ஆவது வழித்தடத்தில், போரூர் முதல் பவர் ஹவுஸ் வரையிலான உயர்மட்ட வழித்தட கட்டுமானப் பணிகளில் ஒரு மைல்கல்லாக, இரட்டை அடுக்கு பிரிவுக்கான கடைசி ‘யு’ வடிவ கார்டர் (UGirder) அமைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில்  வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளதாவது:

இந்தப் பாதையின் கட்டுமானத்திற்குத் தேவையான பாலத்தின் பாகங்கள், தூண்களின் மேல் பாகங்கள் உட்பட 25 வெவ்வேறு வகையான 3,410 காங்கிரீட் கட்டமைப்புகள், வயலாநல்லூர் வார்ப்பு நிலையத்தில் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

இந்த வார்ப்பு நிலையத்தின் பணிகள் முழுமையாக வெற்றிபெற்று நிறைவடைந்துள்ளன.

முக்கிய அம்சங்கள்

வழித்தடம் 4இல் மொத்தம் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 8 கி.மீ. தொலைவுக்கான மேம்பாலப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதில், 4 மெட்ரோ ரயில் நிலையங்கள் அடங்கிய 4 கி.மீ. நீளமுள்ள இரட்டை அடுக்கு மேம்பாலப் பகுதியும் அடங்கும். இந்த இரட்டை அடுக்கு பகுதிக்கான கடைசி ‘யு’ வடிவ கார்டர் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

இந்தப் பிரிவில், சுமார் 1.22 லட்சம் கன மீட்டர் கான்கிரீட் மற்றும் 18,470 மெட்ரிக் டன் இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக 2.42 லட்சம் மெட்ரிக் டன் எடையுள்ள பிரீகாஸ்ட் கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *