உச்ச நீதிமன்ற தீர்ப்பு: மகாராட்டிராவில் ஷிண்டே உள்பட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக உயிர் பிச்சை – உத்தவ் தாக்கரே தாக்கு!

Viduthalai
2 Min Read

அரசியல்

மும்பை, மே 14- உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 சட்டமன்ற உறுப்பினர் களுக்கு தற்காலிக உயிர் பிச்சை கிடைத்து இருப்பதாக உத்தவ் தாக்கரே சாடினார். மகாராட்டி ரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசில் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தவர் ஏக்நாத் ஷிண்டே.

இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் உத்தவ் தாக்கரேக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கி அரசைக் கவிழ்த்தார். பா.ஜனதாவுடன் கூட் டணி வைத்து முதலமைச்சர் ஆனார். உத்தவ் தாக்கரே அரசு கவிழும் முன் ஏக்நாத் ஷிண்டே உள்பட சிவசேனாவின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேருக்கு அப்போதைய சட்டப் பேரவை துணைத் தலைவர் தகுதி நீக்க தாக்கீது அனுப்பி இருந் தார்.

இந்த நிலையில் உச்சநீதிமன் றத்தில் நடந்து வந்த மகாராட்டிர அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்குகளில் சட்டமன்ற உறுப்பி னர்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கும் அடங்கும். வழக்கில் தீர்ப்பு கூறிய உச்சநீதிமன்றம், நிலுவையில் இருக்கும் சட்டமன்ற உறுப்பி னர்கள் தகுதி நீக்க தீர்மானம் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் சட்டப் பேரவை தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்தநிலையில் (உத்தவ் பாலா சாகேப் தாக்கரே) கட்சி தலைவரும், மேனாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே 12.5.2023 அன்று செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:- உச்சநீதி மன்ற தீர்ப்பின் மூலம் 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உயிர் பிச்சை தற்காலிகமானது தான். உச்சநீதிமன்றம் குறிப்பட்ட காலத்தில் தகுதி நீக்க விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளது.

எனவே சட்டமன்ற உறுப்பி னர்கள் தகுதி நீக்க தீர்மானத்தின் மீது சட்டப் பேரவை தலைவர் விரைவாக முடிவு எடுக்க வேண் டும். முதலமைச்சர் பதவியிலிருந்து விலகாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் என்னை மீண்டும் முதலமைச்சர் பதவியில் அமர்த்தி இருக்க முடி யும் என்று தீர்ப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இருப்பினும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியது எனக்கு திருப்தி அளிக்கிறது. தார்மீக அடிப்படையில் நான் அதை செய் தேன். மக்கள் மன்றத்தை சந்திக்க நான் பா.ஜனதா-சிவசேனா கூட்ட ணிக்கு சவால் விடுக்கிறேன். என்னை சட்டசபையில் பலத்தை நிரூபிக்குமாறு ஆளுநர் கூறியதே சட்டவிரோதம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படியெனில் தற் போது உள்ள அரசு சட்ட விரோதமானது தான். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உடனிருந்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் அனில் பரப் கூறுகையில், “இந்த அரசு சட்ட விரோதமானது என கூறி வருகி றோம். கொறடாவின் பங்கு முக்கி யமானது.

அந்த நேரத்தில் கொறடாவாக எங்கள் அணியை சேர்ந்த சுனில் பிரபு இருந்தார். எனவே ஷிண்டே அணியினர் கொறடா உத்தரவை மீறி உள்ளனர். சட்டமன்ற உறுப்பி னர்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சட்டப் பேரவை தலைவர் அதிக காலம் எடுத்து கொள்ளக்கூடாது. 

அதிருப்தி அணி சட்டமன்ற உறுப்பினர்கள் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு குறைந்த நேரம் தான் உள்ளது. 

சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க சட்டப் பேரவை தலைவர் ராகுல் நர்வேக் கருக்கு கடிதம் எழுது வோம்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *