தேனி, நவ. 2– தேனி மாவட்டம் கீழக்கூடலூர் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈசுவரன் (வயது 55). விவசாயியான இவர், கடந்த 29ஆம் தேதி, வயல் வேலைக்கு செல்வதற்காக கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஈசுவரனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத் துவமனையில் அனுமதித்தனர். அங்கு தலைக்காய சிகிச்சை பிரிவில் இருந்த அவர், மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, ஈசுவரனின் உடல் உறுப்புகளை, கொடை அளிப்பது குறித்து அவருடைய குடும்பத்தினரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அவர்களும் ஒப்புக்கொண்டனர். அதன்படி, அவரது உடல் உறுப்புகளை, அரசு மருத்துவர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். இதனை தொடர்ந்து, இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மதுரையில் இருந்து விமானம் மூலம் நேற்று (1.11.2025) காலை வந்தது. திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கல்லீரலும், ஒரு சிறுநீரகம் மற்றும் கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சியில் இன்னொரு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உடல் உறுப்புக் கொடையின் மூலம், 6 பேர் மறுவாழ்வு பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
