நாகை மாவட்டத்தில் “பெரியார் உலகம்” நிதி வசூல் பணி

திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள “பெரியார் உலகம்”வசூல் பணியில் ஈடுபட்ட கழக பொறுப்பாளர்கள் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், நாகை மாவட்ட தலைவர் விஎஸ்டிஏ.நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் மு.இளமாறன், நாகை நகரத் தலைவர் தெ.செந்தில்குமார், நாகை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா, நாகை நகர செயலாளர் சண்.ரவிகுமார் 31-10-2025 அன்று  நாகை மாவட்டத்தில் செ.கவிதா நாகை மாவட்ட மகளிர் பாசறை தலைவர்,  தெ.செந்தில்குமார்-நாகை நகர தலைவர், முருகானந்தம் – மேலாளர், இரா.முத்துகிருஷ்ணன் – மாநில பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர், சண்.ரவிகுமார் – நாகை நகர செயலாளர், ஆசிரியர் பு.அலமேலு – மாவட்ட மகளிரணி தலைவர், சையது யாசிர், மருத்துவர் கவுபத் மர்லியா, பொரவச்சேரி, குஞ்சுபாபு சின்னதுரை – நாகை ஒன்றிய செயலாளர் ஆகியோரைச் சந்தித்தனர்.

பெரியார் உலக நிதிக்கான துண்டறிக்கையை வழங்கி பெரியார் உலகம் பற்றிய சிறப்புகளை தோழர்கள் கூறியதை அன்புடன் ஏற்று பெரியார் உலகத்திற்கு தாங்களும் பங்களிப்பு வழங்குவதாக மகிழ்வுடன் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *