கழகக் களத்தில்…!

3.11.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1066

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  *வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *சிறப்புரை: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) *தலைப்பு: வைக்கம் வெற்றி விழா நூற்றாண்டு காட்சியும் மாட்சியும் *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்).

4.11.2025 செவ்வாய்க்கிழமை
விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

விழுப்புரம்: காலை 10 மணி *இடம்:
ஆ.மு.ரா.இளங்கோவன் இல்லம், விழுப்புரம் *நோக்கம்: 16.12.2025 அன்று ஆசிரியர் விழுப்புரம் வருகை மற்றும் பொதுக்கூட்டம், பெரியார் உலக நிதி திரட்டல், விடுதலை நாளேடு சந்தா சேர்ப்பு, மறைமலைநகர் சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு மாநாட்டு தீர்மானங்கள் செயலாக்கம் *விழைவு: அனைவரும் கலந்து கொண்டு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் அளிக்க கோருதல்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *