சுயமரியாதைப் பாதையில் நான்காம் தலைமுறை

பெரியார் பன்னாட்டு மய்யம், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் – ஆஸ்திரேலியா சார்பில் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் நடைபெற்று வரும் 4ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டின் (4th international humanists confrence) முதல் நாள் நிகழ்வில் காஞ்சிபுரம், மறைந்த சுயமரியாதைச் சுடரொளி
டி.ஏ. கோபாலன் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும், டி.ஏ. ஜி. பொய்யாமொழி அவர்களின் பெயர்த்தியுமான டி. லக்சயா வரவேற்புரை ஆற்றினார். கடல் கடந்து சென்றாலும் பகுத்தறிவாளர்களின் வழித்தோன்றல்கள் பெரியாரின் சுயமரியாதைப் பாதையில் தவறாமல் நடப்பார்கள் என்பதற்கு இவரைப் போன்ற நான்காம் தலைமுறையே சான்று!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *