பொது நல வழக்கு அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வை அளிப்பது இல்லை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ.2  அனைத்து தவறுகளுக்கும் பொது நல வழக்கு தீர்வை அளிக்கும் சர்வரோக நிவாரணி அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்ற வழக்குகளில், நீதி மன்றங்களுக்கு காவல் துறையினர் தவறான தகவல் களை அளிப்பதை தடுக்கும் வகையில், விதிகளை வகுக் கக்கோரி, டில்லியைச் சேர்ந்த ஆதித்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தனக்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்திருந்த மனு உயர் நீதி மன்றத்தில் தனி நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, அந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டது எனக் கூறியுள் ளார்.

பின்னர், குற்றப்பத்திரிகை நகல் கேட்டு விண்ணப் பித்த போது, எந்த குற்றப்பத் திரிகையும் தாக்கல் செய்யப் படவில்லை என மனு திருப்பி அனுப்பப்பட்டது. அதனால், நீதிமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்த அரசு வழக்குரைஞர் மற்றும் பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, நீதிமன் றத்தில் தவறான தகவலை தெரிவித்திருந்தால், அதற்கு ஆதாரம் இருந்தால், சட் டப்படியான நடவடிக்கையை மனுதாரர் எடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து, அரசு வழக்குரைஞர், காவல் துறை அதிகாரி மீது நட வடிக்கை எடுக்கக் கோரி, தனிப்பட்ட காரணத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை, பொதுநல வழக்காக கற்பனை செய்து கூட பார்க்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், எல்லா தவறு களுக்கும், பொதுநல வழக்கு, சர்வரோக நிவாரணி அல்ல என வலியுறுத்திய நீதிபதிகள், நீதிமன்றத்தை நாட முடியாதவர்களின் பிரச்சினைக்காக மற்றவர்கள் நீதிமன்றத்தை நாட உரு வாக்கப்பட்ட பொது நல வழக்கை, தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரி வித்துள்ளனர்.

நீதிமன்றங்களில் தவறான தகவல்கள் தெரிவிப்பதை தடுக்க சட்ட விதிகள் ஏற்கனவே உள்ளன. இது சம்பந்தமாக விதிகள் வகுப் பது அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. மனு தாரர் தனது குறைகளுக்கு உரிய அமைப்பை நாடி, நிவாரணம் பெறலாம் எனவும் நீதிபதிகள், தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *