கோவில் திருவிழாக்களில் யாருக்கும் சிறப்பு மரியாதை கூடாது! மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

1 Min Read

மதுரை, மே 15 கோவில் திருவிழாவில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் – யாருக்கும் சிறப்பு மரியாதை கொடுக்கக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சிவகங்கை மாவட்டம் நாமனூரைச் சேர்ந்த லட்சுமணன், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எங்கள் கிராமத்தில் சித்திவிநாயகர், சீனிவாசபெருமாள், கலியுக மெய் அய்யனார், சேவுக பெருமாள் அய்யனார் உள்ளிட்ட 11 கோவில்கள் அமைந்துள்ளன.

இங்கு கடந்த 1900ஆ-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச் சியாக திருவிழா நடத்தப்பட்டு வரு கிறது. இந்த கோவில்களுக்கு என தனிப் பட்ட பழக்க, வழக்கங்கள் உள்ளன. இந்த ஆண்டுக்கான விழா ஜூன் மாதம் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் நடக்கிறது.

இந்த நிலையில் இந்த கோவில்களின் திருவிழா நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த தனி நபர்கள் முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். எனவே எங்கள் கிராம கோவில் திருவிழாவில் தனி நபர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினர் யாருக்கும் சிறப்பு மரியாதை கிடையாது என்று சம்பந்தப்பட்டவர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். அனைவரும் சமமாக நடத்த வேண்டும் இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசார ணைக்கு வந்தது. முடிவில், மனுதாரர் கிராம கோவில் பக்தர்களும், பொதுமக் களும் சமமாக நடத்தப்பட வேண்டும், யாருக்கும் சிறப்பு மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஏற்கெனவே பிறப்பிக்கப் பட்ட உத்தரவை சிவகங்கை வருவாய் அதிகாரி உறுதி செய்ய வேண்டும். அனைத்து சமூகத்தினரும் சமமாக நடத்துவதையும் உறுதி செய்ய வேண் டும் என நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *