தமிழ்நாட்டில் ஓ.ஆர்.எஸ்.எல்., ஓ.ஆர்.எஸ். ஃபிட் கரைசல்கள் விற்பனைக்குத் தடை! மருந்துக் கடைகளில் பறிமுதல் செய்யவும் உத்தரவு

2 Min Read

சென்னை, நவ. 1- தமிழ்நாட்டில் ஓஆர்எஸ் கரைசல் என்ற பெயரில் போலியான பானங்களை விற்பனை செய்தால், நடவடிக்கை எடுக்கப் படும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தி யுள்ளது. ஓஆர்எஸ் என்றால் ஓரல் ரீஹை டிரேஷன் சொல்யூஷன் என்பதாகும்.

வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவைகளால் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் போது ஓஆர்எஸ் வழங்கப்படுகிறது. உலக பொது சுகாதார அமைப்பு, தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் பெயர் அச்சிடப்பட்ட ஓஆர்எஸ் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஓஆர்எஸ் என்ற பெயரில் அனுமதியின்றி விற்பனை செய்யப்படும் பானங்களை ஒன்றிய அரசு கடந்த வாரம் தடை செய்திருந்தது. இந்த நிலையில் ஓஆர்எஸ் என்ற பெயரில் போலி பானங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மாவட்டங்களில் உள்ள மருந்த கம் உள்ளிட்டவற்றில் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கும் சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த வகையில் ORSL, ORSL PLUS, ORS FIT என்ற பெயர்களில் மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக பொது சுகாதார நிறுவனத்தால் வழங்கப்படும் அங்கீகாரம் அச்சிடப்பட்ட ஓஆர்எஸ் மட்டுமே விற்பனை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழுவதும் ஓஆர்எஸ்எல் என்று பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்ட போலியான பானங்கள் பல்வேறு வண்ண நிற பெட்டிகளில் விற்பனை யாகி வந்தது. அதில் கடைசியில் கீழ் பகுதியில் இவை ஓஆர்எஸ் இல்லை என்றும் அச்சிடப்பட்டுள்ளது. ஓஆர்எஸ்எல் என்ற கரைசலை மருந்தகம், கடைகளில் இருந்து பறிமுதல் செய்ய தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஓஆர்எஸ் என்பது குளுக்கோஸ், சோடியம், பொட்டாசியம், பிற எலக்ட்ரோலைட்டுகளின் கலவையாகும். இது தூய நீரில் கரைக்கப்படும் போது உடலில் இழந்த திரவங்கள், தாதுக்களை விரைவாக நிரப்பும் ஒரு கரைசலை உருவாக்குகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக ஏற்படும் நீரிழப்புக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உப்பும் சர்க்கரையும் கலந்த கலவைதான் ஓஆர்எஸ் கரைசல் ஆகும். எனவே இதை வீட்டிலேயே தயாரிக்கலாம் என்கிறார்கள். இந்த கரைசல் தயாரித்த 24 நேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். உடலில் உள்ள நீரிழப்பை சமன் செய்ய இது உதவுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *