ஈரோட்டில் 13.5.2023 அன்று மாலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுதிய, “தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை” என்ற நூலை சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் வெளியிட ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.வி. சரவணன் பெற்றுக் கொண்டார். பேராசிரியர் நம். சீனிவாசன் எழுதிய “ஆசிரியர் வீரமணி 90” என்ற நூலை ம.தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தி வெளியிட ஈரோடு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் அ. செந்தில்குமார் பெற்றுக் கொண்டார்.