சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா அனுபவங்கள்!

1 Min Read

திருவெறும்பூர், நவ. 1- திருவெறும்பூரில் நடைபெறும் பெரியார் பேசுகிறார் 13 ஆவது நிகழ்ச்சி, 26.10.2025 அன்று மாலை 6 மணிக்கு, பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ப.கவு.யாழினி தலைமை வகித்தார். மா.ச.நிரல்யா முன்னிலை ஏற்க, பு.வி.கியூபா வரவேற்புரை வழங் கினார்.

“சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – ஓர் அனுபவம்” எனும் தலைப்பில் பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழக) மாணவர் அ.க. யாழினி சிறப்புரை ஆற்றினார்.

மாநாட்டின் ஒருநாள் நிகழ்ச்சிகளை முழுமையாகக் கவனித்து, அழகாக எடுத்துரைத்தார். மாநாட்டிற்கு வராதவர்கள் கூட, அம்மாநாட்டில் பங்கேற்றது போன்ற உணர்வை, அவரது பேச்சு ஏற்படுத்தியது.

நிறைவாக அ.தமிழ்க்கவி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் மேடை இருந்தவர்கள் அனைவரும் பெண் மாணவத் தோழர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

நிகழ்வில் க.அ.தமிழர சன், க.அம்பிகா, க.புனிதா, ம.பி.அனுராதா, இரா.தமிழ்ச்சுடர், அ.சிவா னந்தம், சி.பஞ்சலிங்கம், சவு.சந்திரன், ஆறு.இராஜா ராமன், ஆ.பாண்டிக்குமார், கரு.புனிதவதி, ஆ.அசோக் குமார், ஆ.அன்புலதா, ஆர்.குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *