கழகக் களத்தில்…!

2 Min Read

2.11.2025 ஞாயிற்றுக்கிழமை
அன்புமொழி இல்லத்தின் சார்பில் இர.இலட்சுமியம்மாள் படத்திறப்பு ந.இரத்தினம் நூற்றாண்டு நிகழ்ச்சி

குடியேற்றம்: காலை 10 மணி*இடம்: பெரியார் அரங்கம், புவனேசுவரிப்பேட்டை, மோரப்பேட்டை சாலை, குடியேற்றம் *தலைமை: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: தே.அ.ஓவியா *முன்னிலை: குடும்ப உறவினர்கள், கழகத் தோழர்கள் மற்றும் நண்பர்கள் *படத்தினை திறந்து வைத்து உரை: நீலசந்திரகுமார் (மாநில அமைப்புச் செயலாளர், வி.சி.க.) *சிறப்புரையாளர்கள்: காஞ்சி கதிரவன் (கழக பேச்சாளர்), பழ.ஜெகன்பாபு (வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) *நன்றியுரை: க.சவு.இந்துஜா *இவண்: இர.அன்பரசன் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்), ந.தேன்மொழி (கழக மகளிரணி துணைச் செயலாளர்).

பட்டுக்கோட்டை கழக மாவட்ட அவசர கலந்துரையாடல் கூட்டம்

பட்டுக்கோட்டை: மாலை 5 மணி *இடம்: பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை அலுவலகம் (கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில்) *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட கழக தலைவர்), அரு.நல்லதம்பி (மாவட்ட கழக காப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *பொருள்: நவம்பர் 27 அன்று பட்டுக்கோட்டை வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பொதுக்கூடடம் நடத்துதல், பெரியார் உலகம் நிதி அளிப்புக்கு நன்கொடை திரட்டுதல், மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயல்படுத்துதல், அக்டோபர் 23 சென்னையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல் *வேண்டல்: அனைத்து அணி கழக பொறுப்பாளர்களின் வருகையும்-கருத்தும் *இங்ஙனம் அத்தி பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்), மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்).

பகுத்தறிவு இலக்கிய மன்றம்
155ஆம் தொடர் சொற்பொழிவு

கல்லக்குறிச்சி: காலை 10 மணி *இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி *தலைமை: பொன்.அறிவழகன் (செயலர்) *வரவேற்பு: மு.அப்துல் அமீது *முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழக தலைவர்), மருத்துவர் கோ.சா.குமார் (மாநில கழக மருத்துவரணி செயலாளர்) *செறிவுரை: தந்தை பெரியார்க்கும் வ.உ.சிதம்பனார்க்கும் உள்ள தொடர்பு – பெ.எழிலரசன் (தலைவர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்), தந்தை பெரியாரும் பெண்ணடிமைத் தீர்வும் – ச.தமிழ்ச்செல்வி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *