எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது

சென்னை, நவ. 1– கடற்​படை, ராணுவப் பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், சிறீஹரி​கோட்​டா​வில் இருந்து எல்​விஎம்-3 ராக்​கெட் மூலம் நாளை (2.11.2025) மாலை 5.26 மணிக்கு விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளது.

நாட்​டின் தகவல் தொடர்பு வசதி​களை மேம்​படுத்த இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் (இஸ்​ரோ) சார்​பில் இது​வரை 48 செயற்​கைக்​கோள்​கள் விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட்​டுள்​ளன. அதில், கடந்த 2013ஆம் ஆண்டு செலுத்​தப்​பட்ட ஜிசாட்-7 (ருக்​மணி) செயற்​கைக்கோளின் ஆயுள்​காலம் விரை​வில் முடிவடைகிறது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடி​யில்அதிநவீன சிஎம்​எஸ்​-03 (ஜி​சாட்​-7ஆர்) செயற்கைக்​கோளை இஸ்ரோ வடிவ​மைத்​துள்ளது.

24 மணிநேர கவுன்ட்​-ட​வுன்

ஆந்​திர மாநிலம் சிறீஹரி​கோட்​டா​வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து எல்​விஎம்-3 (ஜிஎஸ்​எல்வி மார்க்​-3) ராக்​கெட் மூலம் இந்த செயற்​கைக்​கோள் நாளை (நவ.2) மாலை 5.26 மணிக்கு திட்டமிட்டபடி விண்​ணில் செலுத்​தப்படஉள்ளது. ராக்கெட் ஏவுதலுக்​கான 24 மணிநேர கவுன்ட்​-ட​வுன் இன்று (1.11.2025) மாலை 5.30 மணி அளவில் தொடங்க உள்​ளது. இதையொட்​டி, இறு​தி​க்கட்​டப் பணி​களில் இஸ்ரோ விஞ்​ஞானிகள் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்.

4,410 கிலோ எடை

சிஎம்​எஸ்​-03 தொலைத் தொடர்பு செயற்​கைக்​கோள் 4,410 கிலோ எடை கொண்​டது. இது குறைந்​த​பட்​சம் 170 கி.மீ. தூரம், அதி​கபட்​சம் 29,970 கி.மீ. தொலைவு கொண்ட புவிவட்​டப்பாதை​யில் நிலைநிறுத்​தப்பட உள்​ளது. இது​வரை புவிவட்ட சுற்​றுப்​பாதைக்கு ஏவப்​பட்​ட​தில் இது​தான் அதி​கபட்ச எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்​கைக்​கோள் ஆகும்.

இதில் விரிவுபடுத்​தப்​பட்ட மல்​டி பேண்ட் தொழில்​நுட்ப வசதி​கள் உட்பட பல்வேறுநவீன அம்​சங்​கள் இடம் பெற்​றுள்ளன. இந்​திய கடற்​படை, ராணுவத்​தின் பணி​களுக்​காக இந்த செயற்​கைக்​கோள் பயன்​படுத்​தப்பட உள்​ளது. இந்​தி​யக் கடலோர எல்​லைகளை கண்​காணிப்​பதுடன், போர்க் கப்​பல்​கள் – விமானங்​கள் இடையே தொலைத் தொடர்பு சேவையை மேம்​படுத்தி பாது​காப்​பான​தாக வழங்​கும். ஒட்​டுமொத்​தத்​தில் கடல்​சார் பாது​காப்பை அதி​கரிப்​பதே இதன் முக்​கிய நோக்​கம். இது எல்​விஎம்-3 ராக்​கெட்​டின் 7ஆவது ஏவுதல் திட்​டம் ஆகும். இதற்கு முன்பு சந்​திர​யான்-3 விண்​கலம் இந்த ராக்​கெட் மூல​மாக வெற்​றிகர​மாக செலுத்​தப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது. செயற்கைக்கோள் ஏவுதலை முன்னிட்டு தேவையான முன்னேற்பாடுகளை இஸ்ரோ செய்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *