சென்னை, அக்.31 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தவாறு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பயனாளிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பெறும் வசதி முதற்கட்டமாக 07.09.2023 அன்று முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் (MTC) அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம், மாற்றுத் திறனாளிகள், கண்பார்வை குறை பாடு உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகள், [https://www.tnesevai.tn.gov.in/](https://www.tnesevai.tn.gov.in/) என்ற இணையதளம் அல்லது அரசு இ–-சேவை மய்யம் வாயிலாக விண்ணப்பித்து, பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2025-2026 ஆம் நிதி ஆண்டில் பயண அட்டையை இணையதளம் வாயிலாகப் புதுப் பிக்கவும்,
இந்த வசதியினை அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் (விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்ப கோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி) விரிவுபடுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தைச் செயல்படுத்த மாவட்ட அளவில் முகாம்கள் நடத்த வேண்டியுள்ளதால், ஏற்ெக னவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ஆம் தேதி வரை செல்லத்தக்க இந்த அட்டைகள், தற்போது மேலும் இரண்டு மாத காலத்திற்க்கு, அதாவது டிசம்பர் 31 வரை அரசு போக்குவரத்துக் கழகப் பேருந் துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
