திருவனந்தபுரம், அக்.31– ஒன்றிய அரசு கடந்த 2022ஆம் ஆண்டு முதல் பி.எம்.சிறீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய, தொடர்ந்து மறுத்தது. இதனால் ஒன்றிய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.
இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழ்நாடு அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.
இதற்கிடையே, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.சிறீ திட்டத்தை கொண்டு வர சம்மதித்து. பி.எம்.சிறீ. திட்டத்துக்கான ஒன்றிய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள கல்வித்துறை செயலாளர் கையெ ழுத்திட்டார்.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால், பி.எம்.சிறீ திட்டத்தில் இணையும் முடிவைக் கேரள அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
பி.எம்.சிறீ திட்டத்தில் எதிர்ப்புக்குள்ளான சில நிபந்தனை களை தளர்த்தக் கோரி ஒன்றிய அரசுக்கு, மாநில அரசு தரப்பில் கடிதம் எழுத இருப்பதாகவும், உரிய பதில் கிடைக்கும் வரை இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
