சென்னை விமான நிலையத்தில் இன்று (30.10.2025) காலை ஆஸ்திரேலியா மெல்போர்னில் 01, 02-11-2025 அன்று நடைபெறவிருக்கும் பெரியார் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டில் பேராளராக பங்கேற்கவும் அதனூடே 2-வார காலம் குயின்ஸ்லாந்து கெய்ன்ஸ் – சிட்னி – அண்டை நாடான நியூசிலாந்து – ஆக்லாந்து உள்ளிட்ட பல்வேறு அயலகப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கழகத்தினரை, பகுத்தறிவாளர்களை கழகத்தின் – துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பினர். மேலும் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களுக்கு அடையாளப் பூர்வமாக பயனாடை அணிவித்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
மெல்போர்னில் நடைபெறும் பெரியார் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டில் பேராளராக பங்கேற்பவர்களை வாழ்த்தி வழி அனுப்பல்!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
