ஜமைக்காவை புரட்டிப்போட்ட ‘மெலீசா’ புயல்

1 Min Read

ஹவானா, அக்.30– ஜமைக்கா மட்டுமின்றி, அண்டை நாடுகளான கியூபா, ஹைதி, டொமினிக் குடியரசு உள்ளிட்ட நாடுகளில் இடி, மின்னலுடன் தொடர்ந்து  மழை பெய்து வருகின்றது.

அமெரிக்கா அருகே பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டமைப்பு நாடுகளாக கரீபியன் தீவுநாடுகள் அமைந் துள்ளன.

அமெரிக்காவின் ஆளுகைக்கு உட் பட்ட தன்னாட்சி தீவுப்பகுதிகளான இவற்றில் கியூபா, ஜமைக்கா, பார்படோஸ், ஆண்டிகுவா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார முக்கியவத்துவம் வாய்ந்த சுற்றுலா தீவுக்கூட்டங்களாக உள்ளது.மேலும் உலகின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படும் ‘கியூபா’, பன்னாட்டு கிரிக்கெட் அரங்கில் தொடர்ந்து சாதனை என தன்னகத்தே பல புகழாரங்களை கொண்ட நாடாக கரீபியன் தீவு நாடுகள் விளங்குகின்றன.

இந்தநிலையில் பசிபிப் பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி புயலாக வலுப்பெற்றது. ‘மெலீசா’ என பெயரிடப்பட்ட இந்த புயல் ஜமைக்கா அருகே உள்ள கடலில் நிலை கொண்டது. கடந்த 174 ஆண்டுகளில் இதுவரை உருவான புயல்களிலேயே மிகவும் அபாயகரமான அதிதீவிர புயலாக மெலீசா வலுப்பெற்றது. மணிக்கு 18 கி.மீ வேகத்தில் ஜமைக்கா நோக்கி இந்த புயல் நகர தொடங்கியது. இதனால் ஜமைக்காவில் உள்ள கடலோர மாகாணங்களில் மணிக்கு 281 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு தங்கியிருந்த லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த புயலால் இதுவரை 15 பேர் உயிரிழந்தநிலையில் தற்போது கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது. மணிக்கு 20 கி.மீ வேகத்தில் நகரும் இந்த புயலால் அங்கு 300 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசி தீவு நாட்டை சின்னாபின்னமாக்கி வருகிறது. இந்த புயல் நள்ளிரவில் முற்றாகக் கரையை கடக்கும் வரையில் மீட்புப்பணிகளில் பேரிடர் மீட்புத்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *