ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்காக ரூ.82 கோடி மதிப்பிலான அரசு விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

Viduthalai
2 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, மே 16 –ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவிக ளுக்காக ரூ.82.02 கோடியில் கட்டப்பட் டுள்ள விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள், ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.5.2023) திறந்துவைத்தார்.

தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் ரூ.42.46 கோடி மதிப்பில் ஆதிதிராவிடர் மாணவ, மாணவி களுக்கான 21 விடுதிகள், ரூ.16.59 கோடியில் 9 பள்ளிக் கட்டடங்கள், ரூ.22.98 கோடியில் 4 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் கட்டப் பட்டுள்ளன. இவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். 

இதில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச் சந்திரன், பி.கே.சேகர்பாபு, என்.கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத் தலைவர் உ.மதிவாணன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத் துணைத் தலைவர் செ.கனிமொழி பத்ம நாபன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலாளர் ஜி.லட்சுமி பிரியா, ஆதி திராவிடர் நலத் துறை இயக்குநர் த.ஆனந்த், தாட்கோ மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி, பழங்குடியினர் நல இயக்குநர் எஸ்.அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கரூர் மாவட்டம் கடவூர், மதுரை ரேஸ்கோர்ஸ், திருச்சி மாவட்டம் துறையூர், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சிவகங்கை மாவட்டம் கொம்புக்காரனேந்தல், காஞ்சிபுரம் மாவட்டம் சிறீபெரும் புதூர், நாகை மாவட்டம் வேதாரண் யத்தில் ரூ.18.89கோடியில் பள்ளி மாணவர் களுக்கான 9 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் குலவணி கர்புரம், தேனி மாவட்டம் எரசக்க நாயக்கனூர், கோட்டூர், திருவாரூர் மாவட்டம் பேரளம் மற்றும் காஞ்சி புரத்தில் ரூ.6.80 கோடியில் 5 விடுதிகள், கரூர் மாவட்டம் தாந்தோணிமலை, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம் மருதன் கோன்விடுதி, மதுரை மாவட்டம் சொக்கிக்குளம், சென்னை ராயபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் ரூ.16.76 கோடி யில் கல்லூரி மாணவர்களுக்கான 7 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் ரெட்ட மங்கலம், செங்கல்பட்டு மாவட்டம் மீனம்பாக்கம், கடலூர் மாவட்டம் சேப்பாக்கம், மேலவன்னியூர் மற்றும் சிதம்பரம் நந்தனார் பள்ளி,சேலம் மாவட்டம் வெள்ளிகவுண்டனூர், புதுக்கோட்டை மாவட்டம் முள்ளன் குறிச்சி, ராணிப்பேட்டை மாவட்டம் எலத்தூர், சேலம் மாவட்டம் தாத்தியாம் பட்டியில் உள்ள 9 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ரூ.16.59 கோடியில் வகுப் பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், திருப்பத்தூர் மாவட்டம் கீழுர், திருவண்ணா மலை மாவட்டம் புளியம்பட்டி, நீலகிரி மாவட்டம் மு.பாலாடா, நாமக்கல் மாவட்டம் செங்கரையில் ரூ.22.98 கோடியில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் கட்டப்பட் டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர், தாட்கோ மேலாளர்கள் மற்றும் செயற் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டுக்காக ரூ.2.04 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ள 23 வாகனங்களின் செயல்பாட்டை முதல மைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர் களுக்கு, ரூ.55 கோடியில் வீடுகளை வாங்குவதற்கான மானிய ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *