குடியாத்தம் இர.இலட்சுமி அம்மாள் மறைவு விழிக்கொடை – உடற்கொடை வழங்கல்

1 Min Read

மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசனின் தாயாரும், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ந.தேன்மொழியின் மாமியாரும் ஆகிய இர.இலட்சுமி அம்மாள் (வயது 95) அவர்கள் 28.10.2025 அன்று மாலை 6:50 மணிக்கு இயற்கை எய்தினார். அன்னாரின் விழிகள் கொடையாக வழங்கப்பட்டன. இன்று (29.10.2025) மாலை 4 மணிக்கு சி.எம்.சி மருத்துவமனைக்கு உடற் கொடை வழங்கப்பட்டு இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட தலைவர் வி. இ.சிவக்குமார், தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, த.மு.மு.க கட்சிகளின் தோழர்கள் இரங்கல் உரையாற்றினர். மாவட்ட கழக செயலாளர் உ.விஸ்வநாதன், கு.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் ச.கலைமணி, சி.லதா, மாவட்ட ப. க தலைவர் மருத்துவர் பழ. ஜெகன்பாபு, மாவட்ட செயலாளர் வினாயகமூர்த்தி, க.அணிகசலயத் அலீம், நகர தலைவர் சி.சாந்தகுமார், நகர அமைப்பாளர் வி.மோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் இ.தமிழ் தரணி, மாவட்ட துணைச் செயலாளர் மு.சீனிவாசன் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

குறிப்பு: மறைவுச் செய்தி அறிந்ததும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், இர.அன்பரசனைத் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *