மழையின் காரணமாக 33 விழுக்காடு சேதம் அடைந்த பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை

சென்னை, அக். 29- வடகிழக்கு பருவமழை காரணமாக 33 சதவீதத்திற்கும் மேல் சேதம் அடைந்த பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு  உரிய நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது.

பருவ மழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் அதிகளவில் சேதம் அடைந்துள்ளது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை செயலாளர்கள் கொண்ட குழுவினர் சேதம் அடைந்த பயிர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட் டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்காக வட்டார அளவில் வேளாண்மை மற்றும் வரு வாய்த்துறையினர் கொண்டு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

கணக்கெடுப்பு

அதன்படி, 33 சதவீதத்திற்கும் மேல் சேதம் அடைந்த பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய (28.10.2025) நிலவரப்படி தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டத்தில் 4,437 ஹெக் டர் நிலமும், மற்ற மாவட்டத்தில் 517 ஹெக்டர் நிலமும் என மொத்தம் 4,954 ஹெக்டர் நிலம் 33 சதவீதத்திற்கு மேல் சேதம் அடைந்து இருக்கிறது. மொத்தம் 14 ஆயிரத்து 499 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதவிர டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட பின்பு நெல்கொள்முதல் நிலையங்கள் முன்பு மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டு நெல் மூட்டைகள் மழையால் எவ்வளவு சேதம் அடைந்து இருக்கிறது? மூட் டைகளிலேயே எவ்வளவு நெற்கதிர்கள் முளைத்து, விவ சாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்ற கணக்கெடுப்பும் நடக்கிறது.

நிவாரணம்

இன்னும் ஒரு வாரத்தில் முழுமையான கணக்கெடுப்பு பணி நடத்தி முடிக்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதன் அறிக்கை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்கான நிவாரண தொகையினை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *