மன அழுத்தம் போக்க மகளிர் குழுவுக்கு பயிற்சி

1 Min Read

சென்னை, அக்.29 தமிழ்நாடு முழு​வதும் மகளிர் சுயஉதவிக் குழு​வினருக்கு மனஅழுத்​தத்​தைப் போக்​கு​வதற்​கான பயிற்​சிக்கு தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் ஏற்​பாடு செய்​துள்​ளது.

இதுதொடர்​பாக அந்​நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சுயஉதவிக் குழு மகளிரின் மன ஆரோக்​கி​யம் மற்​றும் நல்​வாழ்​வுக்​காக தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் சார்​பில் தமிழ்நாட்டின் 37 மாவட்​டங்​களி​லும் உள்ள 388 வட்​டாரங்​கள், 12,525 ஊராட்​சிகளில் உள்ள 3.31 லட்​சம் மகளிர் சுயஉதவிக் குழு பிர​தி​நி​தி​களுக்​கும், 16,562 பள்​ளி​கள், 1,602 கல்​லூரி​களில் பயிலும் மாணவ, மாணவி​களுக்​கும் மனநலம் மற்​றும் போதைப்​பொருள் பயன்​பாட்​டுக்குஎதிரான விழிப்​புணர்வு பயிற்சிகளை வழங்கி வரு​கிறது.

இதில் மனநலம் மற்​றும் மனநோய், மனநல கோளாறுகள், தற்​கொலைத் தடுப்​பு, கட்​டுக்​கதைகள் மற்​றும் தவறான கருத்​துகள், சமூக மனநலம், மனநலம் தொடர்​பான சட்​டம் மற்​றும் திட்​டங்​கள், போதைப்​பொருட்​களை பயன்​படுத்​து​வ​தால் ஏற்​படும் தீய விளைவு​கள் பற்றி விளக்​கம் அளிக்​கப்படும். மேலும், வளரிளம் பெண்​கள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்​பினர்​கள் மற்​றும் முதி​யோருக்​கான மனநல இடை​யீடு​கள் குறித்​தும் பயிற்​சி​யில் விளக்​கமளிக்​கப்​பட்டு வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *