கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து
திருவனந்தபுரம், அக்.29 தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஜனநாயக செயல் முறைக்கு விடப்பட்டுள்ள நேரடி சவால் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரி வித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, குஜராத், மத்தி யப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் (அக்.27) அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அதிமுக இதற்கு ஆதரவு தெரிவித் துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பினராயி விஜயன், “கேரளா உள்ளிட்ட மாநிலங் களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள் வது என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவு, ஜனநாயக செயல்முறைக்கு விடப்பட்டுள்ள நேரடி சவால். புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் களைப் பயன்படுத்தாமல், 2002-2004 வரையிலான வாக்காளர் பட்டியல்களின் அடிப்படையில் சிறப்பு தீவிர திருத்தம் மேற் கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
1950 மக்கள் பிரதிநிதித் துவச் சட்டம் மற்றும் 1960 வாக்காளர் பதிவு விதிகள் ஆகியவற்றின்படி, தற்போதைய பட்டியலை அடிப்படையாகக் கொண்டே எந்த ஒரு வாக்காளர் பட்டியல் திருத்தமும் மேற்கொள் ளப்பட வேண்டும். கேர ளாவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், சிறப்பு தீவிர திருத்தம் செய்வது நடைமுறைக்கு ஏற்றதல்ல. இதை மாநில தேர்தல் அதிகாரி தெளி வாகக் கூறி இருந்த போதிலும், சிறப்பு தீவிர திருத்தத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவது தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தின் மீது கடுமை யான சந்தேகத்தை ஏற்ப டுத்துகிறது.
‘‘வாக்களிப்பதைப் போன்று வேறில்லை; நான் நிச்சயமாக வாக் களிப்பேன்’’ என்பதுதான் 2024ஆம் ஆண்டின் தேசிய வாக்காளர் நாள் செய்தி. இந்த முழக்கத்தை ஊக்குவித்தவர்களே, அதற்கு முரணாக பீகாரில் 65 லட்சம் வாக்காளர் களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினார்கள். வயது வந்தோருக்கான வாக்குரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 326-அய் இந்த செயல் கடுமையாக மீறுகிறது. அரசியல் வச திக்காக குடிமக்களின் வாக்களிக்கும் அடிப்படை உரிமையை சிதைக்கவோ அல்லது பறிக்கவோ முடி யாது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது தேசிய குடி மக்கள் பதிவேட்டை மறைமுகமாக செயல் படுத்துவதற்கான முயற்சி என்ற கவலை அதிகரித்து வருகிறது. மத்தியில் உள்ள ஆளும் சக்திகள் எஸ்அய்ஆர் செயல் முறையைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலை தங்களுக்கு சாதகமாக கையாளுகின்றன என்ற விமர்சனம் இன்னமும் உள்ளது.
பீகாரில் மேற் கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதி ராகத் தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதி மன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளன. ஆனால், அதே செயல் முறையை மற்ற மாநிலங்களுக்கும் விரிவு படுத்துவது குற்றமற்றது என்றோ நடுநிலையானது என்றோ, பார்க்கப்பட மாட்டாது. விரிவான தயாரிப்பு மற்றும் ஆலோச னையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண் டிய இவ்வளவு பெரிய திருத்தத்தை, அவசரமாக நடத்துவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சி.
தனது நம்பகத் தன்மையை குறைக்கும் முடிவுகளில் இருந்து தேர்தல் ஆணையம் விலகி இருக்க வேண்டும். ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள சக்திகள், தேர்தல் ஆணையத்தை ஆளும் கட்சிக்கான கருவி என்ப தாக குறை மதிப்புக்கு உள்ளாக்கக்கூடாது. எஸ் அய்ஆர் செயல்முறைக்கு எதிராக கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரும் ஒன்றுபட்டு இரண்டாம் கட்ட எஸ்அய் ஆர் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
