திருப்பத்தூர், அக். 28- திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், சுயமரியாதைச் சுடரொளியுமான மறைந்த ஏ.டி.கோபால்-சந்திரா ஆகியோரின் மூத்த மகன் திருப்பத்தூர் நகர பகுத்தறிவாளர் அமைப்பாளர் ஏ.டி.ஜி.கவுதமன் 25.10.2025 அன்று காலை 9.00 மணிக்கு மறைவுற்றார். அவர் மறைவிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரது உடலுக்கு திராவிடர் கழகம் சார்பில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வீர வணக்கம் செலுத்தினர்.
26.10.2025 அன்று நண்பகல் 1.00 மணிக்கு கழகம் சார்பில் இரங்கல் கூட்டம் மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.
எ. அகிலா (மாநில பொருளாளர் மகளிரணி) பெ. கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) நா. சுப்புலட்சுமி, எம். ஞானம் (மாவட்ட தலைவர் விடுதலை வாசகர் வட்டம்) வ. புரட்சி (செயலாளர் விடுதலை வாசகர் வட்டம்)
பன்னீர்செல்வம் (காங்கிரஸ்) சிறீதர் (தி. மு. க.), அனாமிகா (மறைந்த கவுதமன் மகள்) இரா. கலைச்செல்வன் ஆகியோர் சுயமரியாதைச் சுடரொளியின் நினைவுகளை போற்றி இரங்கல் உரையாற்றினார்கள்.
சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.ஜி.கவுதமன் அவர்களின் உடல் கொடையாக மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. அது குறித்து தோழர்கள் குறிப்பிட்டு பேசியபோது, கருப்புச் சட்டை தோழர்கள் தான் வாழும் போது பிறருக்கும், இந்த சமூகத்திற்கும் பயனுள்ள வாழ்க் கையை வாழ்ந்து, இறந்த பிறகும் தன் உடலைக் கொடையை கொடுத்து மருத்துவ ஆராச்சிக்கு உதவுவது மூலம், இவ்வுலகில் எல்லோர் மனதிலும் வாழக் கூடியவர்கள். இச் செயலை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். அப்போதே இவரைப் போன்றே தானும் உடல் கொடை தருவதாக ஒருவர் அறிவித்தார். இச்செயல் அங்கிருந்த அனைவரையும் மெய்ச் சிலிர்க்க வைத்தது. இறந்த பிறகும் இந்த கருப்புச் சட்டைக்காரர்கள் இச்சமூகத்தை நெறிப்படுத்தி வழிநடத்துகிறார்கள் என்பதை உணரமுடிந்தது.
இந்த இரங்கல் கூட்டத்தில் கழக தோழர்கள் மற்றும் அனைத்து அமைப்புகளை, இயக்கங்களை சார்ந்த தோழர்கள் ஏராளமானோர் பங்கேற்று மரியாதை செய்தனர்.
