நாட்டிலேயே முதல்முறை: 1 முதல் 14 வயது சிறுமிகளுக்கு புற்றுநோய் இலவச தடுப்பூசி திட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

1 Min Read

சென்னை, அக்.27– தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். நாட்டிலேயே முதல் முறையாக இத்திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை தீவுத்திடலில் தன்னார்வ அமைப்பு சார்பில் நடைபெற்ற 16ஆவது ஆண்டு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்துப் பேசுகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த இலவச புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்தின் மூலம், இளம் வயது சிறுமிகள் கருப்பை வாய் புற்றுநோய் போன்ற அபாயங்களில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக 2025-2026 பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு ரூ.36 கோடி நிதி ஒதுக்கியுள்ளதும், தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *