பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ‘நான் முதல்வன்’ ஹேக்கத்தான் போட்டியில் வென்று சாதனை

வல்லம், அக்.27– பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நான் முதல்வன் ஹேக்கத்தான் போட்டியில் பங்கு கொண்டு பரிசுகள் பெற்றனர்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் நவீனமான முறையில் கற்று தரப்பட்டு மாணவர்களை திறன் மிக்க தொழில்நுட்ப வல்லுநர்களாக ஆக்குவதில் நமது தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யில், முன்னணி தொழிற்சாலைகளுடன் இணைந்து நமது கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமன்றி, பிற கல்லூரி மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நமது பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்களுக்கும் மற்றும் பிற கல்லூரி பேராசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 17.10.2025 அன்று பட்டுக்கோட்டை, டாக்டர் கலாம் பாலி டெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ஹேக்கத்தான் (Hackathan)  போட்டிகளில் கலந்து கொண்ட பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்கள் டி.தயாநிதி மற்றும்  ஏ. ஜனார்த்த மணிகண்டன் ஆகியோர் TANCE  HACKATHAN “PLC Programming & Applications using TIA Portal Software” என்ற தலைப்பில் தயாரித்த திட்ட மாதிரிக்கு இரண்டாம் இடத்தையும் (Second Place) மற்றும் ஏ. கின்ஸ்லிங்ராஜ் மற்றும் எம்.சந்தோஷ்பாண்டி  மூன்றாமிடத்தையும் (Third Place) பெற்றனர்.

இந்த HACKATHAN போட்டியில் இரண்டாமி டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ. 3,000  ( ரூபாய் மூவாயிரம்),  மூன்றாமிடம் பெற்றவர்க ளுக்கு ரூ. 2,000 (ரூபாய் இரண்டாயிரம்) பணப்பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் 10க்கும் மேற்ப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டது  குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி மற்றும் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா பாராட்டினார்கள். இந்நிகழ்வில் முதன்மையர் ஜி.இராஜாராமன், நான் முதல்வன் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.அய்யநாதன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *