ரஷ்யா மீது மேலும் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் டிரம்புக்கு உக்ரைன் அதிபர் கோரிக்கை

1 Min Read

லண்டன், அக். 27– எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தின் மீதும் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் போர் தொடங்கி 3½ ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள். இருப்பினும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்தநிலையில் நிதி மற்றும் ராணுவ உதவி வேண்டி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று (26.10.2025) இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையில் நடந்த கூட்டத்தில் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் வழங்க அய்ரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, ரஷ்யா அதிபர் புதின் மீது மேலும் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்.

அங்குள்ள எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தின் மீதும் பொருளாதார தடை விதிக்க வேண்டும். டோமாஹேங்க்ஸ் மற்றும் அதிநவீன ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க வேண்டும்” என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கோரிக்கை வைத்தார். இதனிடையே நேற்று (26.10.2025) உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *